யாழ்ப்பாணத் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
கோப்பாய் 51ஆவது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்றைய தினம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுன்னாகம் பொலிஸார் இணைந்து நடாத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post