கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் 21 வயதான யுவதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பெட்ரோ கனடா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலக்கு வைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பெண் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post