Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

இளைஞர்களை அச்சுறுத்தி யாழ்.நகரப் பகுதியில் நூதனக் கொள்ளை!! – இருவர் பொலிஸ் பிடியில்!!

April 29, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் நூதனமான முறையில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கைபேசி அபகரிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரில் கடந்த ஒரு வாரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களை மறித்து “எமது சகோதரியுடன் கைபேசியில் உரையாடுகிறாய், அவருடைய படத்தை பணப்பையில் வைத்திருக்கிறாய்” என்று அச்சுறுத்திவிட்டு சோதனையிடுவது போன்று பாவனை செய்து அவர்களிடமிருந்து கைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் ஒன்று தப்பித்து வந்துள்ளது.

இந்த நிலையில் 4ஆவது சம்பவமாக யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இளைஞர் ஒருவரை அதேபாணியில் அச்சுறுத்தி 6 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பெறுமதியான கைபேசியை இருவர் அபகரித்துச் சென்றனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இருவரைக் கைது செய்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: கைதுகைபேசிகொள்ளைநூதனக் கொள்ளைபணம்பொலிஸ் பிடிபொலிஸ் புலனாய்வுப் பிரிவுயாழ்ப்பாணம்
Previous Post

மஹிந்தவின் கோட்டை சரிந்தது!- ராஜபக்ஷர்களுக்கு மற்றுமொரு அடி!!

Next Post

தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றதாக நாடகமாடிய போதைப் பொருள் குற்றவாளிகள்!!

Next Post
தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றதாக நாடகமாடிய போதைப் பொருள் குற்றவாளிகள்!!

தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றதாக நாடகமாடிய போதைப் பொருள் குற்றவாளிகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.