Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!

October 30, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் தமிழகத்தில் பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு தாயொருவர் கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 23 வயதான மணிகண்டனுக்கும் 19 வயதான சினேகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், சில மாதங்களில் கர்ப்பமாகிய இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்ற சினேகாவின் தாய் மற்றும் தந்தை கேரளாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது பாட்டி சரசு என்பவர் அவருக்கு துணையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22ம் திகதி காலையில் குளிக்க சென்றுவிட்டு திரும்பி வந்த போது குழந்தையை காணவில்லை என்றும் யாரோ தூக்கி சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வீட்டிற்குள் சோதனை செய்த போது குழந்தை சடலமாக நீர் நிறைந்த பால் கேனிற்குள் இருந்துள்ளது.

இதனை அவதானித்த பொலிஸார் பாட்டி சரசு மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பம் என்னவெனில் குழந்தையை கொலை செய்தது தாய் சினேகா என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இதில் சினேகாவை விசாரித்த போது, வறுமையின் காரணமாக வளா்க்க முடியாது என்பதால் குழந்தையை பால் கேனில் போட்டு மூடிவிட்டு காணவில்லை என முறைப்பாடு செய்தேன் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தெற்கு காவல் நிலைய பொலிஸார் கொலை வழக்குப் பதிந்து சினேகாவை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Tags: #Crime#Investigation#Murdered#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Theniindia
Previous Post

ராய் லட்சுமி கடற்கரையில் கிளாமர் போட்டோஷூட்

Next Post

கனடாவில் சொத்துக்களை கொள்வனவு செய்ய முயற்சித்த சீனா!

Next Post
கனடாவில் சொத்துக்களை கொள்வனவு செய்ய முயற்சித்த சீனா!

கனடாவில் சொத்துக்களை கொள்வனவு செய்ய முயற்சித்த சீனா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.