Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வங்கியில் பணம் எடுத்தவரிடம் துணிகரக் கொள்ளை!! – வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!

March 7, 2022
in இலங்கை
வங்கியில் பணம் எடுத்தவரிடம் துணிகரக் கொள்ளை!! – வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிரிபத்கொட நகரிலுள்ள வங்கியொன்றிலிருந்து 27 லட்சம் ரூபாவை எடுத்துக்கொண்டு சென்றவரை , மோட்டார் சைக்கிள் ஒன்றில் வழிமறித்து பணத்தைப் பறித்துச் சென்ற கொள்ளையனை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிரிபத்கொட லும்பினி மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சந்தேகநபர் நீர்கொழும்பு தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 18ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் அந்த வங்கியின் பின்னாலுள்ள வாகன தரிப்பிடத்திற்கு வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமது வாகனத்தை நோக்கி சென்றபோது இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்றும் கைது செய்யப்பட்ட போது 5 கிராம் 300 மில்லி கிராம் போதைவஸ்து இந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பிரதேச புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதற்கண்மையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து சந்தேகநபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நபர் சொகுசு வாகனம் ஒன்றில் ஆலயங்களுக்குச் சென்று இக்கொள்ளை தொடர்பாக பொலிசாருக்கு தம்மைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பூஜைகளை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கென அவர் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா வரை செலவிட்டு உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது கொள்ளையடித்த பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளொ ன்றும் எஞ்சிய பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Tags: இலங்கைகிரிபத் கொடகொள்ளைபணம்வங்கி
Previous Post

வீட்டுத்திட்டத்தில் அரசியல் செய்கிறோம்!- அங்கஜன் ஒப்புதல் வாக்குமூலம்!!

Next Post

தலையில் பொல்லால் அடித்தால் தான் நிம்மதி!! – விமல் கூறிய தகவல்!!

Next Post
தலையில் பொல்லால் அடித்தால் தான் நிம்மதி!! – விமல் கூறிய தகவல்!!

தலையில் பொல்லால் அடித்தால் தான் நிம்மதி!! - விமல் கூறிய தகவல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.