மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை நடந்த விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு சிறுவர் இல்லம் முன்பாக உள்ள வளைவுப் பகுதியிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றிப் பயணித்த மூவர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
வளைவில் எதிரில் வந்த வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிந்தவர்கள் 16 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post