Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக உதவவில்லை – வெளிவிவகாரத்துறை அமைச்சர் விளக்கம்

August 30, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக உதவவில்லை – வெளிவிவகாரத்துறை அமைச்சர் விளக்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைகாக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும்.

நட்டமடையும் அரச நிறுவனங்களை கால தேவைக்கமைய மறுசீரமைக்காவிடின் நாட்டு மக்களுக்கான அடிப்படை நலன்புரி சேவைகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்கட்டண திருத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது-

மின்கட்டண அதிகரிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு சேவை கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.

1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலக்கரி மற்றும் புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட்ட போது சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்புக்கள் தோற்றம்பெற்றன.இருப்பினும் அத்துறைகள் மறுசீரமைக்கப்பட்;டன.உரிய காலத்தில் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத்தியாவசியமானது.

வுhழ்க் வாழ்க்கை செலவு அதகரிப்பினால் நாட்டு மக்கள் குறிப்பாக வறுமை கோட்டில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்னகள்.ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனைகளை சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் முன்வைத்துள்ளன.

வாழ்வில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது .

சுர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள இடம்பெறும் பேச்சுவார்த்தை தொடர்பில் அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பலவந்தமான முறையில் ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் தேவை இலங்கைக்கு உள்ளது.ஆகவே நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை செயற்படுத்த வேண்டும்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் தொடர்ந்து நடத்தர மக்களை நெருக்குள்ளாக்குவது நியாயமற்றது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காவிடின் நாட்டு மக்களுக்கான அடிப்படை நலன்புரி சேவைகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்படும்.இலங்கை மின்சார சபையில் உள்ள ஒரு சில பொறியியலாளர்கள் மற்றும் டீசல் மாபியாக்கல் தங்களின் குறுகிய நலனுக்காக புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டத்திற்கு எதிராக செயற்பட்டார்கள்,தொடர்ந்து செயற்படுகிறார்கள்.-என்றார்.

Tags: அலி சப்ரிசிறிலங்காநாணய நிதியம்பொருளாதார நெருக்கடிவெளிவிவகாரத்துறை அமைச்சர்
Previous Post

மதுபான விற்பனையில் பெரும் வீழ்ச்சி

Next Post

சிறைக்கைதிகள் இருவர் உயர்தரப் பரீட்சையில் சித்தி

Next Post
சிறைக்கைதிகள் இருவர் உயர்தரப் பரீட்சையில் சித்தி

சிறைக்கைதிகள் இருவர் உயர்தரப் பரீட்சையில் சித்தி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.