யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் என்ற 57 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post