சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 5 நாள்களுக்கு முன்னர் தனது 7 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் பேர்த்தியாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச காணொலிகளை வற்புறுத்தி காண்பித்து வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post