Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸார்!- கைது செய்வோம் என அச்சுறுத்தல்!!

April 4, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸார்!- கைது செய்வோம் என அச்சுறுத்தல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸார், கைது செய்வோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது, அங்கு வந்த பொலிஸார் ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

செய்தி சேகரிப்புக்காகவே வந்துள்ளோம் என்று ஊடகவியலாளர்கள் தெரிவித்து அடையாள அட்டைகளைக் காண்பித்தபோதும், தற்போது நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், யாராக இருந்தாலும் கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவித்தனர் என்று கூறப்படுகின்றது.

அந்த இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர், உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகலாது விட்டால் கைது செய்வேன் என்று ஊடகவியலாளர்களுடன் கடும் தொனியில் வாக்குவாதப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்கள், அடையாள அட்டை இலக்கங்களும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டன.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரையும் குவித்தனர்.

Tags: அச்சுறுத்தல்ஊடகவியலாளர்கைது செய்வோம்கொக்குவில்செய்தி சேகரிப்புபொலிஸார்யாழ்ப்பாணம்
Previous Post

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 9 பேர் யாழ். பொலிஸாரால் கைது!

Next Post

அனைத்து பல்கலைச் செயற்பாடுகளையும் உடன் நிறுத்தப் பணிப்பு!

Next Post
அனைத்து பல்கலைச் செயற்பாடுகளையும் உடன் நிறுத்தப் பணிப்பு!

அனைத்து பல்கலைச் செயற்பாடுகளையும் உடன் நிறுத்தப் பணிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.