Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!

May 9, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பில் இன்று கூடிய மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு அருகிலும், காலி முகத் திடலிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதை அடுத்து கொழும்பு தற்போது பற்றியெரிகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மைனா கேகோ கம போராட்டத்தளத்தில் இருந்த கொட்டகையைப் பிடுங்கி எரிந்து வன்முறையை ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் காலி முகத் திடலுக்குச் சென்று கோட்டா கோ கமவில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை பிடுங்கி எறிந்ததுடன், அங்கிருந்த மக்கள் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.

காலிமுகத் திடல் கலவர பூமியாகியதை அடுத்து, அங்கு நிலைமைகளை ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீதும் ஒரு குழு கொட்டன்கள், தண்ணீர் போத்தல்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதையடுத்து அவர் அங்கிருந்து அவசரமாக பாதுகாப்புப் பிரிவினரால் அகற்றப்பட்டார்.

இந்தச் சம்பவங்களை அறிந்த மக்கள் காலி முகத் திடலில் கூடத் தொடங்கியதை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. மஹிந்த ஆதரவாளர்கள் துரத்திப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். மஹிந்த ஆதரவாளர்கள் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்.

கொழும்புக்கு மஹிந்த ஆதரவாளர்களை ஏற்றிவந்த பஸ்கள் மக்களால் அடித்து நொருக்கப்பட்டதுடன், ஒரு சில பஸ்கள் தீ வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு வாகனங்கள் அங்குள்ள போற வாவிக்குள் கவிழ்க்கப்பட்டன.

தற்போதும் கொழும்பில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. மக்கள் பல இடங்களில் வீதிக்கு இறங்கி அரசாங்கத் தரப்பினர் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். வீதிகளில் கூடியுள்ள மக்கள் பஸ்களை மறித்து அதில் பயணம் செய்வோரை விசாரித்து வருகின்றனர்.

Tags: அலரி மாளிகைகாலிமுகத்திடல்கொழும்புமஹிந்த ராஜபக்சவன்முறை
Previous Post

வன்முறைக்கு மத்தியில் மஹிந்த இராஜினாமா!!

Next Post

ஆளும்கட்சி உறுப்பினர்களின் வீடுகளை தீயிடும் மக்கள்!! – உச்சத்தை எட்டியது மக்களின் கோபம்!

Next Post
பற்றி எரிகின்றது கொழும்பு!! – வன்முறையை தூண்டிவிட்ட மஹிந்த ராஜபக்ச!!

ஆளும்கட்சி உறுப்பினர்களின் வீடுகளை தீயிடும் மக்கள்!! - உச்சத்தை எட்டியது மக்களின் கோபம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.