Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

கணவனைக் கொலை செய்து சடலத்துடன் உறங்கிய மனைவி!

December 22, 2022
in இந்தியா, முக்கியச் செய்திகள்
கணவனைக் கொலை செய்து சடலத்துடன் உறங்கிய மனைவி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியா உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, அவரது அருகிலேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் வசித்து வந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் மது அருந்திவிட்டு வந்த மனைவியுடன்
சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதுல் மதுபோதையில் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மனைவி கல்லைக் கொண்டு கணவரை பலமாக தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

அதன் பின்னர் கணவர் உடலின் அருகிலேயே அன்னு படுத்து உறங்கினார்.

மறுநாள் குழந்தைகளிடம் தந்தையை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு, வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

மாலையில் வீடு திரும்பியதும் இரவு உணவை தயாரித்த அவர், குழந்தைகள் தூங்கியதும் கணவனின் உடலை இழுத்து சென்று
வீட்டு வாசலில் போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.

அடுத்த நாள் காலையில் கத்தி கூச்சலிட்டு, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அதுலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அன்னுவின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால்
பொலிஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: #Crime#Murder#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

மீண்டும் கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தன வங்கிகள்

Next Post

இன்றைய இராசி பலன்கள் 23-12-2022

Next Post
இன்றைய இராசி பலன்கள் 23-12-2022

இன்றைய இராசி பலன்கள் 23-12-2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.