Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரு வாரங்களில் 104 பில்லியன் ரூபா!! – பணத்தை அச்சிட்டுத் தள்ளும் இலங்கை அரசாங்கம்!!

May 27, 2022
in இலங்கை
வட்டி வீதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!! – புதிய ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் அதிகபட்சமாக மே 20ஆம் திகதி அதிக தொகையாக 85.3 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. கலாநிதி வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஒரே நாளில் அச்சிடப்பட்ட மிகப் பெரிய தொகை இதுவாகும்.

இலங்கை மத்திய வங்கி 2022ஆம் ஆண்டில் இதுவரை 572 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட பணத்தின் நிலையான அளவு 1.2 டிரில்லியன் ரூபாவாகும். 2020 ஆம் ஆண்டில் அது 650 பில்லியன் ரூபாவாக இருந்தது.

சில நாள்களுக்கு முன்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதமர், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கம் 40 வீதத்தைத் தாண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம், அரசாங்கம் வரிகளை அதிகரிக்காவிட்டால் அரசாங்க செலவினங்களுக்கு பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.

Tags: அச்சிடல்அரசாங்கம்இலங்கைபணம்புள்ளி விபரங்கள்மத்திய வங்கி
Previous Post

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்! – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Next Post

Ways To Prevent Spending A Lot Of Money On This Hot Japanese Girls

Next Post

Ways To Prevent Spending A Lot Of Money On This Hot Japanese Girls

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.