Friday, May 16, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

July 24, 2024
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
சிறைபிடிக்கப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள் : ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது ஜூலை வரை மட்டும் 250 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K Stalin) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு (S. Jaishankar)  எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்கள் 22-7-2024 அன்று “IND-TN-10-MM-2517” மற்றும் “IND-TN-10-MM-284” பதிவு எண்கள் கொண்ட படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்றிருந்தனர்.

கடற்றொழில் படகுகள்

இந்தநிலையில், அவர்களும், அவர்களது கடற்றொழில் படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழிலாளர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது கடற்றொழில் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

இதனால், கடற்றொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த நிலைமையைத் தணித்திட உரிய தூதரக முயற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

அதிகபட்ச கைது

அத்துடன், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கையிலிருந்து 87 கடற்றொழிலாளர்களையும், 175 படகுகளையும் விரைவாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச கைது எண்ணிக்கை இது என தமிழக முதல்வர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள விசேட உத்தரவு!

Next Post

சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post
சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.