Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பார்வையற்றோர் உபகரணங்கள் விலை அதிகரிப்பு!-மாணவர்கள் கல்வியிழக்கும் அபாயம்!

September 30, 2022
in இலங்கை
பார்வையற்றோர் உபகரணங்கள் விலை அதிகரிப்பு!-மாணவர்கள் கல்வியிழக்கும் அபாயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பார்வையற்றோர் சமூகம் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

பார்வையற்ற குழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் பலகையின் விலை சுமார் 300 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. எனினும் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

விசேட தொழில்நுட்ப முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒலிப் புத்தகங்களைக் கேட்கும் தொழில்நுட்ப சாதனத்தின் விலை 22 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலர் பெறுமதி அதிகரிப்பு மற்றும் அரசின் அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதித் தடை என்பவற்றால் இவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன.அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அத்தியாவசியமற்றவை என அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் அநீதியானது.

இந்த நிலை தொடர்ந்தால், பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் கல்வி கற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலை உருவாகும். எனவே இதுதொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Tags: அதிகரிப்புகல்வியிழத்தல்பார்வையற்றோர் உபகரணங்கள்மாணவர்கள்விலை
Previous Post

ஆடைகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி!!

Next Post

வவுனியாவில் குருதிச் சோகையால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு!!

Next Post
வவுனியாவில் குருதிச் சோகையால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு!!

வவுனியாவில் குருதிச் சோகையால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.