Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

துன்னாலையில் கொள்ளையடித்த மூவர் சிக்கினர்!- மேலும் மூவரைத் தேடுகிறது பொலிஸ்!!

June 17, 2022
in முக்கியச் செய்திகள்
துன்னாலையில் கொள்ளையடித்த மூவர் சிக்கினர்!- மேலும் மூவரைத் தேடுகிறது பொலிஸ்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறை, துன்னாலை மடத்தடிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து 6 பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் இருந்து 12 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வீட்டுக் கதவை உடைத்து வாள்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பாதுகாப்புக் கமராக்களைச் சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த 6 பேருக்கு வெட்டுக் காயங்களை ஏற்படுத்தி 12 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜித் லியனகேயின் பணிப்புக்கு அமைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் பலாலிப் பகுதியில் வைத்து 36 வயதுடைய ஒருவரும், முடவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்னொருவரும், நகைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags: கொள்ளைதுன்னாலைநகைகள் மீட்புபொலிஸ்மூவர் சிக்கினர்
Previous Post

அவுஸ்திரேலியா தப்பியோட முயன்ற 64 பேர் திருமலையில் கைது!

Next Post

திணறும் ரயில் சேவைகள்! – நிரம்பி வழியும் பயணிகள்!

Next Post
திணறும் ரயில் சேவைகள்! – நிரம்பி வழியும் பயணிகள்!

திணறும் ரயில் சேவைகள்! - நிரம்பி வழியும் பயணிகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.