யாழ்ப்பாணம், நவாலியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவே முச்சக்கர வண்டிக்குத் தீ வைத்துள்ளது.
வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அந்தக் கும்பல் அடித்து நெருக்கியதுடன், தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post