Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரபாகரன் இலக்கை நோக்கி நகர்கின்றது கூட்டமைப்பு!! – எச்சரிக்கும் தேசிய சுதந்திர முன்னனி!!

March 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோட்டாபய தலைமையில் சர்வகட்சி மாநாடு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிக்கக்கூடாது.

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மிகவும் பாரதூரமான கோரிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ளன.

படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்ட புலிகளை விடுவிக்க கோருகின்றனர், விசேட நீதியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து ஈழம் என்ற இலக்கை அடைவதற்கே தமிழ் பிரிவினைவாதிகள் முற்படுகின்றனர்.

நாட்டை மீட்க 30 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்யப்பட்டது. பலர் அங்கவீனமாகியுள்ளனர். எனவே, புலிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நிலைக்கு அரசு வந்துள்ளமை தவறான விடயமாகும்.

எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி ஈழம் என்ற இலக்கை நோக்கி நகர கூட்டமைப்பு முயற்சிக்கிறது. இந்த பொறிக்குள் ஜனாதிபதி சிக்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags: இலங்கைகூட்டமைப்புகோட்டாபயபிரபாகரன்ஜயந்த சமரவீரஜனாதிபதி
Previous Post

இன்றைய ராசிபலன்- 28.03.2022

Next Post

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைக்கு போட்டி! – உள்ளக மோதல்கள் தீவிரம்!

Next Post
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைக்கு போட்டி! – உள்ளக மோதல்கள் தீவிரம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைக்கு போட்டி! - உள்ளக மோதல்கள் தீவிரம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.