Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உக்ரைனில் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் ரஷ்யப் படைகள்!! – நடப்பது என்ன?

March 7, 2022
in உலகம், முக்கியச் செய்திகள்
உக்ரைனில் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் ரஷ்யப் படைகள்!! – நடப்பது என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்துள்ள ரஷ்யப் படைகள் அங்கு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு 11 நாள்கள் கடந்துள்ளபோதும், ரஷ்யப் படைகள் மந்தகதியிலேயே படைநகர்வுகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.

உக்ரைனில் உள்ள ரயில் பாதைகளைப் பயன்படுத்த முடியாதுள்ளமையே ரஷ்யப் படைகளின் வேகமான முன்னேற்றத்தை தடுத்துள்ளது.

ரஷ்யப் படைகளுக்குத் தேவையான பொருள்களை நகர்த்துவதற்கு, ரயில்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றினால் மட்டுமே, அங்குள்ள ரயில் பாதைகளை ரஷ்ய இராணுவத்தால் பயன்படுத்த முடியும். அதேநேரம், படையினருக்குத் தேவையான எரிபொருள் மற்றும் குடிதண்ணீருக்காக தற்காலிக “பைப் லைன்” அமைப்பதும் ரஷ்யாவின் வழக்கமாக இருக்கின்றது.

அவ்வாறு “பைப் லைன்” அமைக்கப்பட்டால் மக்கள் அவற்றைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பை வழங்குவது ரஷ்யப் படைகளுக்கு கடினமானதாகக் காணப்படுகின்றது. இதனால் படைநகர்வுகள் தாமதமாகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட நகரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு பெரிள அளவிலான இராணுவம் தேவையாகவுள்ள நிலையில், கைப்பற்றிய நகரங்களைத் தொடர்ச்சியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ரஷ்யப் படைகளுக்கு சவாலானதாக மாறியிருக்கின்றது.

கார்கிவ் நகரைக் கைப்பற்றினால் ரயில் பாதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ரஷ்யா எண்ணுகின்றது. இதனாலேயே கார்கிவ் நகரைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யப் படைகள் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளன. ஆயினும் உக்ரைனின் கடும் எதிர்த்தாக்குதலால் அந்த முயற்சி இன்னமும் பயனளிக்கவில்லை.

Tags: உக்ரைன்தாக்குதல்நெருக்கடிரயில் பாதைகள்ரஷ்யப்படை
Previous Post

யாழ்ப்பாணத்தில் போராட்டம்!! – ஐ.நா. அமைதிப் படையை அழைக்கும் மக்கள்!!

Next Post

ஹெரோயின் கடத்திய அண்ணணும், தங்கையும்!! – யாழில் வளைத்துப் பிடித்தனர் பொலிஸார்!

Next Post
ஹெரோயின் கடத்திய அண்ணணும், தங்கையும்!! – யாழில் வளைத்துப் பிடித்தனர் பொலிஸார்!

ஹெரோயின் கடத்திய அண்ணணும், தங்கையும்!! - யாழில் வளைத்துப் பிடித்தனர் பொலிஸார்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.