Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

24 ஆண்டுகளாக அரசு பணியில் இருந்த போலி ஆசிரியை: ஒரே ஒரு போன் மூலம் அம்பலம்

October 13, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
24 ஆண்டுகளாக அரசு பணியில் இருந்த போலி ஆசிரியை: ஒரே ஒரு போன் மூலம் அம்பலம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியா- தமிழகம் தேனியில் 24 ஆண்டுகளாக அரசு பணியில் பணியாற்றிய போலி ஆசிரியையின் ஏமாற்று வேலை அம்பலமாகியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப
பாடசாலைஉள்ளது.

இங்கு தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த விஜயபானு என்பவர் கடந்த 1999 -ம்
ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவர், சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறார்.

இந்நிலையில், தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டு, விஜயபானுவின்
சான்றிதழ் பொய்யானது என்றும், மோசடி செய்து பணியில் சேர்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஆசிரியை விஜயபானுவின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அப்போது தான் அவர் கொடுத்த 12 -ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆசிரியை விஜயபானு மீது தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி முறைப்பாடு அளித்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் அவர், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக விஜயபானு அரசு பணியில் பணியாற்றி வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியை விஜயபானு மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: #Investigation#police#TamilNadu#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

ரொறன்ரோவில் மத வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்தும் கூடுதல் பாதுகாப்பு!

Next Post

கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 23 ஆயிரம் முறைப்பாடுகள்

Next Post
கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 23 ஆயிரம் முறைப்பாடுகள்

கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 23 ஆயிரம் முறைப்பாடுகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.