Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வீட்டில் இருந்த தம்பதியரை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி!- புளியம்பொக்கணையில் சம்பவம்!!

May 20, 2022
in உள்ளுர்
வீட்டில் இருந்த தம்பதியரை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி!- புளியம்பொக்கணையில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, புளியம்பொக்கணையில் வீட்டிலிருந்த தம்பதியரைக் கொடூரமாகத் தாக்கி கொள்ளையிட முயன்றோர்,அயலவர்கள் கூடியதால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் நள்ளிரவு நடந்துள்ளது.

குறித்த வீட்டுக்குள் புகுந்த மூவர் வீட்டில் இருந்த கணவனையும், மனைவியையும் கத்தி மற்றும் உலக்கையால் தாக்கியுள்ளனர்.

கணவனின் கையில் வெட்டிக் காயப்படுத்தியதுடன், மனைவியை உலக்கையால் தாக்கிக் கொள்ளையிட முயன்றுள்ளனர்.

வீட்டில் இருந்த சிறுவர்கள் பெருங்குரலில் அழுததால் சந்தேகமடைந்த அயலவர்கள், ஒன்றுகூடியதையடுத்து கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த கணவனையும், கொள்ளையர்களின் தாக்குதலால் பாதிப்படைந்த மனைவியையும் அயலவர்கள் மீட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

தம்பதியர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருப்பதால், வீட்டில் நகைகள், பணம் கொள்ளையிடப்பட்டதா என்பதைச் சரியாகக் கூறமுடியில்லை என்று தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

Tags: FBTTகிளிநொச்சிகொள்ளை முயற்சிதம்பதியர்புளியம்பொக்கணைவீட்டுக்குள் புகுந்து
Previous Post

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!!

Next Post

வடக்கு மாகாணத்தில் நான்காவது “டோஸ்”- வடக்கு சுகாதாரப் பணிமனையின் அவசர அறிவிப்பு!

Next Post
வடக்கு மாகாணத்தில் நான்காவது “டோஸ்”- வடக்கு சுகாதாரப் பணிமனையின் அவசர அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் நான்காவது “டோஸ்”- வடக்கு சுகாதாரப் பணிமனையின் அவசர அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.