வவுனியா, கொத்தகாரன்குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே டீசல் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஓமந்தைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post