வல்வெட்டித்துறை, பொலிகண்டியில் நேற்றுமுன்தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெட்டி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ரவைகள் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post