Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ராஜபக்சக்களின் ஊழல்களே நிதிப் பேரிடருக்குக் காரணம் – சந்திரிகா

September 1, 2022
in இலங்கை
ராஜபக்சக்களின் ஊழல்களே நிதிப் பேரிடருக்குக் காரணம் – சந்திரிகா
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி பேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவே. ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் போராட்டம் மெய்சிலிர்க்க வைத்தது.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை சந்தித்த மாற்றங்கள் தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது – வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது – நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள்? சமூக அரசியல் எழுச்சியால் மாத்திரமே அதை மாற்றமுடியும் – புரட்சியே வழி.

இரண்டு ராஜபக்சக்களின் ஆட்சி காரணமாக நாடு அந்த நிலையை அடைந்திருந்தது. மோசமான வெறுக்கத்தக்க அனைத்தும் அதிகாரத்தில் ஸ்திரப்படுத்தப்பட்டிருந்தது. ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளால்தான் நாம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டோம்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்காளின் ஆதரவை நம்பியுள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எவ்வாறு செயற்படுகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சமூக நலன்புரி மாதிரியுடன் தாராளவாத நிதியியலை கலக்கும் முறைக்கும் அதிகாரிகள் செல்லவேண்டும்.

சர்வதேச சமூகத்தை அடிப்படையாக கொண்ட கடினமான முடிவுகளை இலங்கை எடுக்கவேண்டிய நிலை காணப்படலா. வெளி உதவி தொடர்பான பேச்சுக்களின்போது இந்த நிலை காணப்படலாம்.

ராஜபக்ச அரசாங்கம் ஒரு நாட்டை நோக்கி அதிகமாக நகர்ந்தது. ஆனால் அணிசேரா மாதிரியை இலங்கை பின்பற்றவேண்டும். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இந்தியா விலகியிருந்து காத்திருந்திருக்க கூடிய நிலை காணப்பட்டது. தற்போது இந்தியா எமக்கு உதவ முன்வந்தமை, உதவிகளை வழங்கியமை தொடர்பாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

ராஜபக்சக்கள் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன. ரணிலால் தலைமை வகிக்கப்படும் அதிகாரிகளும், நம்பிக்கைக்குரிய அதிகாரிகளும் நாட்டின் தேசிய விவகாரங்களுக்குத் தீர்வை கண்டால் வரலாற்றின் கடந்த காலம் ராஜபக்சாக்களை உரிய இடத்தில் வைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: சந்திரிகாசிறிலங்காநிதிப்பேரிடர்ராஜபக்ச குடும்பம்
Previous Post

சர்வதேசத்தின் குரல்களை புறக்கணிக்கும் ரணில் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

Next Post

தீர்மானம் கொண்டுவரும் நாடுகளுடன் பேசத் தயாராகும் இலங்கை

Next Post
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை – நீதி அமைச்சர் தகவல்

தீர்மானம் கொண்டுவரும் நாடுகளுடன் பேசத் தயாராகும் இலங்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.