Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த ஆலயத்திற்கு நேர்ந்த கதி!

March 30, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த ஆலயத்திற்கு நேர்ந்த கதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன என ஆலய பரிபாலன சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

1846 ஆம் ஆண்டு அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உச்சவ காலங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

பின்னர்1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது கிராமத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. ஆலய விக்கிரமங்களும் இருந்தன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற போது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன. தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து

கொண்டிருக்கின்றோம் அப்படி இருக்கின்ற போது இப்பொழுது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி
திருவெம்பாவை தினத்திற்கு சென்ற பொழுது முருகன் சிலை காணாமல் போயிருந்தது.

வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில்
அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது
என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

24 மணி ஆளங்களும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் இராணுவம் ஈடுபட்டிருக்கின்ற போது
நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட இராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம் இவ்வாறு

நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் படிப்படியாக காணாமல் போனமைக்கான பிரதான காரணம் என்ன
இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

அண்மைக்காலமாக பௌத்தமயமாக்கலின் அங்கமாக இடம்பெறும் கச்சதீவில் பௌத்த ஆதிக்கத்தினை மேற்கொண்டமை
வெடுக்குநாறிமலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலையினை உடைத்தெறிந்தமை உள்ளிட்ட செயல்களின்

தொடர்ச்சியாகவே பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டுள்ளனவா என
சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Army#SriLankaArmy#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnaஇலங்கை
Previous Post

பேக்கரி உற்பத்திகளுக்கு உதவாத முட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி!

Next Post

மீண்டும் இலங்கையில் நில அதிர்வு

Next Post
மீண்டும் இலங்கையில் நில அதிர்வு

மீண்டும் இலங்கையில் நில அதிர்வு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.