Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மலையாளபுரத்தில் வீடு புகுந்து குழுவின் வெறித்தனம் பல இலட்சம் பெறுமதியான உடமைகள் நாசம் .

August 19, 2021
in இலங்கை, உள்ளுர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று (18) இரவு எட்டு முப்பது மணியளவில்
வீடு ஒன்றினுள் புகுந்த இளைஞர் குழுவொன்று நடத்திய வெறியாட்டத்தில் பல
இலட்சம் பெறுமதியான வீட்டு உடமைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்று புதன் கிழமை இரவு எட்டு முப்பது மணியளவில் மலையாளபுரம் கிராம
அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரின் வீட்டுக்குள் நுழைவாயில் கதவினை
உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வீட்டின்
கதவினையும் உடைத்து உள் நுழைந்து நடத்திய தாக்குதலில் குளிர்சாதனப்
பெட்டி, தொலைக்காட்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தளபாடங்கள்,
வீட்டின் ஜன்னல்கள்  உள்ளிட்ட சொத்துக்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

அத்தோடு இக் கும்பல் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த வீட்டின்
உரிமையாளரான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் பின் வழியால்
தப்பிச் சென்று விட்ட நிலையில் அவரது மகன் மீது தந்தையை கேட்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர். கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான 80 அடி
தகரப் பந்தல் ஒன்று  கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பொருளாளரின்
பொறுப்பில் இருந்துள்ளது.   அன்மையில் கிராமத்தில் நடந்த இரண்டு மரண
வீடுகளுக்கும் அவர் அதனை 40 அடியாக பிரித்து இரண்டு வீடுகளுக்கும்
வழங்கியுள்ளார். ஆனால் தங்களுக்கு 80 அடி பந்தலையும் வழங்கவில்லை எனத்
தெரிவித்து ஏற்பட்ட முரண்பாடுகாரணமாகவே  இத்தாக்குதல் இடம்பெற்றதாக
பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு  முன்
இதே குழு கிராமத்தில் உள்ள பிரிதொரு வீட்டிற்குள் நுழைந்து இவ்வாறு
தாக்குதல் நடத்திய போதும்  பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இதுவரை
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த கிராமத்தவர்கள்
இதன் காரணமாக இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு அடாவடித்தனங்களில் ஈடுப்பட்டு
வருகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

Previous Post

கொவிட்-19 தரவுகளில் சந்தேகம் வேண்டாம் – சுகாதார அமைச்சு .

Next Post

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் (OMP) அலுவலகம் திறப்பு.

Next Post

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் (OMP) அலுவலகம் திறப்பு.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.