ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் புதிய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்ற நிலையில், இருவாரங்களுக்குள் மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் தினேஸ் குணரவர்த்தன தலைமையில் தற்போது 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 அமைச்சர்களும் 30 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரிசாத் பதியுதீன், திகாம்பரம் ஆகியேர் உள்ளடங்கலாக ஐக்கிய மக்கள் சக்தியில் 6 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post