அடுத்த வருடத்திற்கு பொலிஸாருக்குத் தேவையான கண்ணீர்ப்புகை மற்றும் தோட்டாக்கள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விநியோகஸ்தர்களுக்கு தேவையான டொலர்களை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், பொருட்களை இறக்குமதி செய்வது கடினமாக இருந்தாலும், முன்னர் கொண்டு வரப்பட்டு களஞ்சியசாலைகளில் உள்ள பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த முடியும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக தென்னிலங்கையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கலைக்க காவல்துறையினர் பெருமளவில் கண்ணீர் புகை பிரயோகத்தையே மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post