Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அம்பிகாவின் அபாய அறிவிப்பு

April 2, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அம்பிகாவின் அபாய அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட படுமோசமானது என கடுமையாக எச்சரித்துள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன்.

சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த அபாய அறிவிப்பை வெளியிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இராணுவத்துக்கு மேலதிக பலத்தை வழங்குகின்றது. இராணுவம் கைது செய்வதற்கு உரிமையை வழங்குகின்றது, ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிமை வழங்குகின்றது.

தற்போது உள்ள சரத்தின்படி ஒருவரை தடுத்து வைக்க பிரதி காவல்துறை மா அதிபர் அனுமதி வழங்க முடியும்,காவல் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர்ந்தால் அதனை பயன்படுத்த முடியும்.முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள புதுச் சட்டம், ஜனாதிபதிக்கான அதிகாரத்தில் மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில் மேலும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும். அது நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக வர்த்தமானி மூலம் பிரசுரிக்க முடியும்.

ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுவினை, தடை செய்யப்பட்ட அமைப்பாக தீர்மானிக்க முடியும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் முடியும். அதற்கு பொலிஸ் மா அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த சட்டம் நீதித்துறையின் ஏற்பாடுகள் அன்றி காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

Tags: #Army#NewLaw#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TimesWorsesrilanka
Previous Post

பல மில்லியன் மோசடி – இலங்கையில் சிக்கிய 39 சீனர்கள்!

Next Post

சூரியின் விடுதலை வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா?

Next Post
சூரியின் விடுதலை வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா?

சூரியின் விடுதலை வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.