சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட 5 வயது சிறுவனுயடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாய் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மாலை 5.20 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறினார். எங்கே போகிறீர்கள் என கேட்டேன். எதுவும் பேசவில்லை. தம்பியை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளது. அம்மா என்னை விட தம்பி மீதுதான் அதிகமாக பாசம் காட்டுவார். அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை என்று உயிரிழந்த சிறுவனின் மூத்த சகோதரரன் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post