திங்கட்கிழமை 25ஆம் திகதி முதல் பாடசாலை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி வாரத்தில் 3 நாள்கள் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை என்பன 25ஆம் திகதி முதல் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாள்களில் மறு அறிவித்தல் வரையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்றலில் ஈடுபட வேண்டும் அல்லது, இணையவழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post