சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை. இதற்குரிய நிதி அரச வங்கிகளிடமிருந்து கிடைக்காமையே காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவிக்கையில், வங்கிகளிடமிருந்து நிதி கிடைக்கும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடனுக்கான வட்டி 28 வீதம் அறிவிடப்படும் என வங்கிகளூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் வட்டி வீதம் அதிகம் என்பதால் அதனை குறைத்துக்கொள்வது தொடர்பில் வங்கிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.
நிதி கிடைக்கப்பெற்றதும் சிறுபோகத்தில் ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 130 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
Discussion about this post