Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

நாளை தமிழக மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து போராட்டம்

December 24, 2021
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் எதிர்த்து யாழ்.மாவட்ட
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் இன்றையதினம்
யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க
சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பிலேயே இவ்
அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில் பங்கெடுத்து கருத்து தெரிவித்த சம்மேளனத்தின்
தலைவர் அன்னராசா, “நாம் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தை
வன்மையாக கண்டிக்கிறோம்.

அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை காவலில் வைக்க வேண்டும்.
அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க கூடாது.

எங்களுடைய எல்லைக்குள் நுழைந்து தொழில் செய்யும் இந்திய மீனவர்களை இலங்கை
கடற்படையினர் கைது செய்யும் போது, எங்களுக்கெதிராகவும் கடற்படையினருக்கு
எதிராகவும் வன்மையான கருத்துக்கள் சில தமிழக மீனவர்களால்
முன்வைக்கப்படுகின்றது.

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை என தமிழ்நாட்டு மீனவர்கள்
தெரிவிக்கின்றார்கள். எம்மைப் பொறுத்தவரை மீனவர் சமூகமாகிய நாங்கள் பல சுற்று
வார்த்தைகளை மேற்கொண்ட போதும் அதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. நாங்கள் ஏமாற்றப்படுகின்ற சமூகமாகவே காணப்படுகின்றோம்.

இந்தியாவில் எம்மை அவமதித்தும் தவறான செய்திகளையும்
தமிழ்நாட்டு மீனவர்கள் கூறிகொண்டிருக்கின்றார்கள். அந்த பொய்யான
முகத்தை இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு வெளிச்சம் போட்டு
காட்டுவதற்காகவும் நாளை காலை 9 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரை யாழ்
மாவட்ட செயலகம் முன் முற்றுகைப் போராட்டத்தை நடாத்துவதற்கு நாங்கள்
முடிவெடுத்துள்ளோம்.

எங்கள் முற்றத்தில் வந்து தொழில் செய்து விட்டு இலங்கை அரசாங்கம் அதனை
தடுக்கின்றது என கூறுவதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இவ்
போராட்டத்தில் அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்கள்,

அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கு
கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.இந்த போராட்டத்தில் நாம்
எந்த மகஜரையும் கையளிக்கப் போவதில்லை.இந்த போராட்டம் இந்தியாவுக்கு
எதிரானதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதோ எனக் கூறி எங்கள் போராட்டத்தையும்
எங்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.“ எனக் தெரிவித்துள்ளார்.

Previous Post

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியிலிருந்து அகற்றபட வேண்டும் – ஞானசார தேரர்

Next Post

அரசியல் கைதிகளின் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்தாலே உறுதிப்படுத்தப்படும் – அருட்தந்தை சத்திவேல்

Next Post

அரசியல் கைதிகளின் விடுதலை பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்தாலே உறுதிப்படுத்தப்படும் - அருட்தந்தை சத்திவேல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.