Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

நவக்கிரியில் மாயமான இளைஞர் கை, கால் கட்டிய நிலையில் மீட்பு!

March 30, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
பிள்ளைகளுக்கு உணவில்லாததால் தற்கொலை செய்த தந்தை!! – இலங்கையில் சோகம்!!

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார் என்று கூறப்படும் இளைஞர், நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளார்.

நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அருகில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த இளைஞர் மீட்கப்பட்டார் என்று கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவ பரிசோதனைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அருந்தவராசா சயந்தன் (வயது-30) என்ற இளைஞரே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் முன்னுள்ள தோட்டவெளியில் மூவர் அவரைத் துரத்திச் சென்றனர் என்றும், அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, கடந்த 12ஆம் திகதி இந்த இளைஞரின் வீட்டுக்கு வந்த இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதில் இளைஞரின் தந்தை காயமடைந்த நிலையில், தற்போதும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இளைஞரின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே முழுமையான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: இளைஞன்இனந்தெரியாதோர்கடத்தல்சடலம்நவக்கிரிபுத்தூர் மேற்குமீட்பு
Previous Post

இ.தொ.காவின் தேசிய சபைக் கூட்டம் இன்று – தலைவராகிறார் செந்தில் தொண்டமான்!

Next Post

கீரிமலையில் திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் சாவு!

Next Post
விபத்தில் காயமடைந்த பெண் மரணம்!!- சாவகச்சேரியில் சம்பவம்!!

கீரிமலையில் திடீர் சுகவீனமுற்ற இளம் பெண் சாவு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.