முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்றுப் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் இடைக்காலத் தடை விதித்தது.
அதன்பின்னர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று முற்பகல் ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆயினும் நேற்றுப் பிற்பகல் மருத்துவமனைக்குச் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு, துமிந்த சில்வாவை கைது செய்தது.
Discussion about this post