Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை

June 22, 2024
in இலங்கை, உள்ளுர்
திருகோணமலையில் இரு பாடசாலை மாணவிகள் மாயம்: காவல்துறையினர் விசாரணை
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருகோணமலையில் (Trincomalee ) இரண்டு பாடசாலை மாணவிகள் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 15 மற்றம் 17 வயதுடைய இரு நண்பிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த 18ஆம் திகதி காலை வேலைக்குச் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

காவல்துறை விசாரணை

பின்னர் முச்சக்கரவண்டியில் திருகோணமலை – சிங்கபுர பகுதிக்கு வந்து தனது 15 வயது நண்பியையும் ஏற்றிக்கொண்டு அவரது சகோதரியை முன்பள்ளியில் இறக்கிவிட்டு கந்தளாய் பகுதிக்கு சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது

அவர்கள் அங்கிருந்து பேரூந்து ஒன்றில் குருநாகல் (Kurunegala) வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரின் பெற்றோரும் திருகோணமலை தலைமையக காவல்நிலையத்திலும் உப்புவெளி (Uppuveli) காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்தும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு: மீறினால் இலட்சக்கணக்கில் அபராதம்

Next Post

கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

Next Post
கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.