ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகரில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
22 வயதான இந்த யுவதி கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து சிவப்பு நிற சல்வாருடன் புறப்பட்டுச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post