உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த பெருந்துயர் சம்பவமொன்று மொனறாகலை மாவட்டத்துக்குட்பட்ட, வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரை காப்பாற்ற முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்ப தலைவருக்கு நிரந்தர தொழில் இல்லை. இதனால் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் நாட்களை, நகர்த்தியுள்ளனர்.
இதனால் பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக்கொள்ள முடியாத தாய், தற்கொலை எனும் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர்.
Discussion about this post