பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அவசர அவசரமாகச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
அமைச்சர் தம்மிக்க பெரோவின் பொறுப்பில் உள்ள மூதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழுள்ள விடயதானங்கள் பலவற்றை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றிருந்த பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
நாட்டை இந்த நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான எந்தத் திட்டமும் ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லை என்றும், அதனால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அமைச்சர் தம்மிக்க பெரேரா முன்னர் விமர்சித்திருந்தார்.
Discussion about this post