Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழர் பகுதியில் 125 ஏக்கர் காணி அழிப்பு – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

May 28, 2023
in இலங்கை, உள்ளுர், முக்கியச் செய்திகள்
தமிழர் பகுதியில் 125 ஏக்கர் காணி அழிப்பு – கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வன ஒதுக்குக் காடு தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன், வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காட்டுப்பகுதியினை அண்டியுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குறித்த கிராமத்தில் வசித்து வருகின்றார்கள். வாழ்வாதாரத்துக்காக பற்றைக் காடுகளைத் துப்புரவு செய்து உழுந்து விதைத்தாலே உடனடியாக வனவள அதிகாரிகள் கைது செய்து எம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை வாங்கி தருவார்கள்.

ஆனால் தற்போது நூறு ஏக்கருக்கு மேல் காடுகள் அழிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை எமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.

அத்துடன் குறித்த பகுதி ஒதுக்குக்காடு என்பதனால் இதனைத் துப்புரவு செய்வதற்கு சிறிலங்கா அதிபர், அமைச்சரவை, காணி ஆணையாளர், காணி அமைச்சர் ஆகியோரின் அனுமதி கட்டாயம் தேவையான ஒன்றாகும். இவை எவையுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் காணப்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனிடம் மக்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அதிபரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: #AcresLand#Completely#Destroyed#TamilArea#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vavuniya
Previous Post

உலக அழகிப் பட்டம் வென்ற பின் ஐஸ்வர்யா ராய் செய்த வேலை!

Next Post

தான் தூக்கில் தொங்குவதை வீடியோ எடுக்குமாறு 4 வயது மகனிடம் கூறிய தந்தை

Next Post
தான் தூக்கில் தொங்குவதை வீடியோ எடுக்குமாறு 4 வயது மகனிடம் கூறிய தந்தை

தான் தூக்கில் தொங்குவதை வீடியோ எடுக்குமாறு 4 வயது மகனிடம் கூறிய தந்தை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.