Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதியாக பதவியேற்க சஜித்துக்கே உரிமையுண்டு!- ஐ.ம.ச தெரிவிப்பு!!

July 18, 2022
in இலங்கை
ராஜபக்சக்களின் சொத்துக்கள் பறிமுதல் – சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெருமளவான மக்களின் வாக்குகளைப்பெற்ற ஜனாதிபதி நாட்டைவிட்டுச் சென்றதன் பின்னர், அடுத்தகட்டமாக அதிகளவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலுள்ள தெரிவு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவே.

அவரைவிடுத்து மக்களாணை இல்லாத ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் வாக்களிப்பார்களேயானால் அது நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய தீர்மானம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெருமளவான மக்களின் வாக்குகளைப்பெற்ற ஜனாதிபதி நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், அடுத்தகட்டமாக அதிகளவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலுள்ள தெரிவு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆவார்.

அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், எமது தரப்பில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ பிரேமதாஸ முன்மொழியப்பட்டதுடன், அந்த யோசனை பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவினால் வழிமொழியப்பட்டது.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானிப்பார்களேயானால், அது நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானம் அல்ல.

மாறாக அது அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான மேற்கொள்ளும் தீர்மானமாகவே இருக்கும். தனியொரு தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கும் மக்களாணை என்ன?
அண்மையில் நாட்டுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படைக்கோஷம் ‘கோட்டா – ரணில் அரசாங்கம் வீட்டிற்குச் செல்லவேண்டும்’ என்பதாகவே காணப்பட்டது.

எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு தமது வாக்குகளைப் பயன்படுத்தப்போகின்ற அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் நலனை இலக்காகக்கொண்டு, அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நபருக்கு வாக்களிக்கவேண்டியது அவசியமாகும்- என்றார்.

Tags: அதிகளவு வாக்குஐக்கிய மக்கள் சக்திசஜித் பிரேமதாசஜனாாதிபதி
Previous Post

நாடாளுமன்று செல்ல மறுக்கும் எம்.பிக்கள்!

Next Post

இன்றைய இராசிபலன்- 19.07.2022

Next Post
இன்றைய ராசிபலன்- 18.06.2022

இன்றைய இராசிபலன்- 19.07.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.