Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சீன உர நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ள சிறிலங்கா

September 5, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சீன உர நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ள சிறிலங்கா
0
SHARES
Share on FacebookShare on Twitter

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

சேதன உரம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படாததன் காரணமாக இந்த பரிந்துரையை முன்வைக்கப்பட்டுள்ளது என்று கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

96 ஆயிரம் மெட்ரிக் டன் சேதன உரங்கள் கொள்முதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன நிறுவனத்தின் உரங்களின் மாதிரிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. அவை தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டிருந்தன என்று தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை அவதானித்துள்ளது.

அதையடுத்து இறக்குமதிக்குத் தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, விவசாய அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், உரிய உர இறக்குமதிக்கான நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, சீனாவின் உர வழங்குநரான, கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனம், கடந்த 2021 செப்டம்பர் 23 அன்று, 20 ஆயிரத்து 550 மெற்றிக்தொன் உரத்தை கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பியது.

அவை தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படாததால், அதை சிறிலங்காவில் தரையிறக்க முடியாது போனது. அதையடுத்துப் பெரும் சர்ச்சைஏற்பட்டது. உரத்தை இறக்குமதி செய்த இரண்டு அரச நிறுவனங்களான இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் கம்பனி என்பன பணம் வழங்க மறுத்ததோடு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து கொடுப்பனவை நிறுத்துவதற்கான உத்தரவைப் பெற்றன.

இது இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியிருந்த நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இணக்கப்பாட்டின் மூலம் தீர்வு காண, அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கமைய, கப்பலில் உள்ள உரத்தில் 75 வீத இருப்புக்கான கட்டணமாக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ஆயிரத்து 382 மில்லியன் ரூபா) செலுத்தப்பட்டது.

தேவையான கலவை மற்றும் தரம் கொண்ட உரங்களை அதே நிபந்தனைகளின்படி மீண்டும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர்புடைய வழக்கு மீளப் பெறப்பட்டது. ஆயினும் எதிர்பார்த்த தரமான உரம் எதுவும் இதுவரை சீன நிறுவனத்தால் அனுப்பப்படவில்லை.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, நாணயக் கடிதம் மற்றும் உத்தரவாதப் பிணை என்பவற்றின் செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டு செல்லுபடியாகும் நிலையில் வைத்திருக்க வேண்டும். எனினும், அவை முறையே கடந்த மார்ச் 12 மற்றும் மார்ச் 24ஆகிய திகதிகளில் காலாவதியாகிவிட்டன.

அதனால் மீண்டும் தரப்படுத்தப்பட்ட உரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கவில்லை. அதற்காகச் செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெறும் திறனை சிறிலங்கா இழந்துள்ளது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரத்துக்காக செலுத்திய தொகை முழுவதும் அரசுக்கு நட்டமாக மாறியுள்ளது.

அது தொடர்பான பத்திரங்களை காலாவதியாகும் முன் பணமாக்குதல் அல்லது அவற்றின் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்காமை மற்றும் முன்பண செலுத்தலின்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி நிதியை விடுவிக்காதமை ஆகியவற்றின் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தை, இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து வசூலிக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைந்துள்ளார்.

Tags: கறுப்புப் பட்டியல்சிறிலங்காசீன உர நிறுவனம்சீனா
Previous Post

நாட்டிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள் அதிகரிப்பு

Next Post

புற்றுநோய்க்கான தடுப்பூசி சிறிலங்கா முழுவதும் தட்டுப்பாடு

Next Post
புற்றுநோய்க்கான தடுப்பூசி சிறிலங்கா முழுவதும் தட்டுப்பாடு

புற்றுநோய்க்கான தடுப்பூசி சிறிலங்கா முழுவதும் தட்டுப்பாடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.