Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சமாசத்திற்குரிய காணி என நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட காணி மீண்டும் அடாத்தாக பிடிக்கப்படுகிறது.

August 21, 2021
in இலங்கை, உள்ளுர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின்
சமாசத்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணியினை
தனிநபர்கள் அடாத்தாக பிடித்துள்ளதாக சமாச நிர்வாகத்தினர் கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, மாவட்ட அரச அதிபர் மற்றும்
கரைச்சி பிரதேச  செயலாளர் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.

ஏ9 வீதியில் 155 ஆம் கட்டைப் பகுதியில் சில பொது அமைப்புக்களுக்கு
காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரை ஏக்கர் கிளிநொச்சி மாவட்ட பனை
தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கும் கடந்த
2005  ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தது. பெறுமதி
மிக்க இக் காணியினை  தற்போது அரசியல் பின்புலத்தில் சிலர் அடாத்தாக்க
பிடித்துள்ளனர்.   காணியினை அடாத்தாக பிடித்தவர்களுடன் சமாச
நிர்வாகத்தினர் பேசிய  போது அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சில அரசியல்
பிரமுகர்களின் பெயர்கைளை கூறியுள்ளனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் சமாச நிர்வாகம் உடனடியாக கிளிநொச்சி பொலீஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, அரச அதிபர் மற்றும் கரைச்சி
பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கரைச்சி
பிரதேச செயலாளர் பி. ஜெயாகரன் அவர்களிடம் வினவிய போது இந்த விடயம்
தொடர்பில் கிராம அலுவலரும், சமாச நிர்வாகமும் தனது கவனத்திற்கு கொண்டு
வந்துள்ளதாகவும், தாங்களும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளதாகவுமு் தெரிவித்த அவர் பொலீஸார் நடவடிக்கையினை  பொறுத்து தாம்
சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த காணி தொடர்பில் ஏற்கனவே நீதி மன்றில் இரண்டு வழக்குகள்
நடைப்பெற்று அவ்விரு வழக்குகளில் சமாசத்திற்குரியதே காணி என
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சமாச நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையில் தரமற்ற உணவு விடயம்: மாகாண அதிகாரிகள் குழுவென்றை அனுப்பி ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி பிரதம செயலாளர் எஸ்.குகதாஸ் .

Next Post

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Next Post

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.