எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்கியவர் தாம் என்றும் டயானா கமகே தெரிவித்தார். “அந்த கண்ணாடி வீட்டை அழிக்க நான் கல்லை அடிக்க விரும்புகிறேன்,” என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே டயானா கமகே இவ்வாறு தெரிவித்தார்.
Discussion about this post