Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோத்தாவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துக!- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை!!

July 15, 2022
in இலங்கை
கோத்தாவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துக!- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன அழிப்புக்குக் காரணமான கோத்தாபய ராஜபக்சவுக்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. கோத்தாபய ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள கோத்தாபய ராஜபக்ச ஒரு இன அழிப்புப் படுகொலையாளி, போர்க்குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இராணுவத்தினரிடமே ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் கோத்தாபய ராஜபக்சவே பாதுகாப்புச் செயலராக இருந்தார்.

கோத்ததாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் போரின்போதும், போரின் பின்னரும் தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.

கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்சக்களின் பெயரில் சர்வதேச ரீதியாக உள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்றங்கள் பலவற்றில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தால் கோத்தாபய ராஜபக்ச மீது நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அரசியல் கைதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றனர்.

Tags: இலங்கைஇன அழிப்புகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்கோட்டாபாயகோரிக்கை
Previous Post

பொருளாதார உதவியே இந்தியாவின் எண்ணம்!- ஜெய்சங்கர் தெரிவிப்பு!!

Next Post

தம்மிக்கவிடம் பொறுப்புகளை பறித்த ரணில்!!

Next Post
அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய தம்மிக்க பெரேரா!!

தம்மிக்கவிடம் பொறுப்புகளை பறித்த ரணில்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.