கொழும்பு காலிமுகத் திடல் “கோட்டா கோ கம’வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.
நள்ளிரவைத் தாண்டியதும் அதிகாலை ஒரு மணியளவில் படை நடவடிக்கை ஆரம்பமானது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், அவர்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
படை நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத் திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
கோட்டாகோகமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post