இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் சிலர் வௌியேறியதாக ஹார்பர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இலங்கை கடற்படை கப்பலான கஜபாஹூவிற்கு பயணப்பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனிடையே, ஒரு குழு SLNS சிந்தூரல மற்றும் SLNS கஜபாஹு கப்பல்களில் ஏறி துறைமுகத்தை விட்டு வெளியேறியதாக கொழும்பு துறைமுகத்தில் உள்ள துறைமுக மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கப்பல்களில் ஏறியவர்கள் பற்றிய விபரங்களையோ வழங்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் முக்கிய பிரமுகர்கள் வெளியேறியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post