கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட தனது கணவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டாம் எனக்கேட்டு அவிசாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஒன்றரை லட்ச ரூபா லஞ்சம் வழங்கிய பெண்ணொருவரை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து , தரகர் ஒருவர் மூலம் சந்தேகநபரின் கணவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது 27,000 ரூபாய் செலுத்தி 100 கிராம் கஞ்சாவை கொள்வனவு செய்த போது சந்தேக நபர் வசிக்கும் வீட்டை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது 3 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த போது சந்தேகநபரான பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டாம் என தெரிவித்து அதற்காக ஒன்றரை லட்ச ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இதுதொடர்பாக ஊழல் மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்த பணத்தை வழங்கும்போது இப்பெண்ணை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post