நாடு தற்போது நெருக்கடியின் ஆரம்பத்திலேயே இருக்கின்றது என்று தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனிமேல்தான் மோசமான விடயங்கள் நடக்கவுள்ளன என்று தெரிவித்தார்.
நாளாந்தம் கப்பல்களுக்குக் கொடுப்பதற்காக 40 மில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலையில் உள்ளேன் என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, மக்கள் மூன்று நேரம் உண்ண முடியாத, ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டும் உணவு உண்ண வேண்டிய நிலைமை உருவாகும் என்றும் தெரிவித்தார்.
எமக்கு சில பில்லியன் டொலர் அவசியம் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, டொலர் கிடைக்காவிட்டால் எதிர்காலம் இல்லாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post