இந்த அரசால் இனிமேலும் நாட்டை ஆள முடியாது. எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதனை வலியுறுத்தி – கட்சி பேதங்களை மறந்து, நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் சஜித் அறைகூவல் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.
அத்துடன். நிலையானதொரு அரசின்கீழ் – ஐந்தாண்டு வேலைத்திட்டத்தின்மூலம் இந்நாட்டை கட்டியெழுப்பலாம் எனவும் அவர் ஆலோசனை முன்வைத்தார்.
அதேவேளை, அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிரணி தலைவர்களும் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
Discussion about this post